சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி


சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி
x

‘டாக்டர் 56.’ இதில் பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார்.

'பருத்தி வீரன்' படம் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி, திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அப்படிப்பட்ட ஒரு படம்தான் 'டாக்டர் 56.' இதில் பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார். இந்தப் படத்துக்காக தன்னை பிரத்யேகமாக கரடுமுரடான ஆக்‌ஷன் குணாதிசயத்தில் மாற்றிக்கொண்டு நடித்துள்ளார். தற்போது சமூகத்தில் நடந்து வரும் அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர் கலந்த உண்மை கதை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு தமிழில் வரும் பிரியாமணி படம் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் பிரவீன், தீபக்ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராகேஷ் திலக் ஒளிப்பதிவில், நோபின் பால் இசையமைக்க பிரவீன் ரெடி கதை திரைக்கதை எழுதி தயாரிக்க ராஜேஷ் ஆனந்த் லீலா டைரக்டு செய்துள்ளார். ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி தமிழ், தெலுங்கில் படத்தை வெளியிடுகிறார்.


Next Story