போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகைக்கு மிரட்டல்


போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகைக்கு மிரட்டல்
x

தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரியை போதை பொருள் வைத்திருந்த புகாரில் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பானது. அவரிடம் இருந்து கொக்கையின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டது.

கே.பி.சவுத்ரி செல்போனை ஆய்வு செய்தபோது சில நடிகைகளுடன் நூற்றுக்கணக்கான முறை அவர் பேசி இருப்பது தெரிய வந்தது. அவர் பேசிய நடிகைகள் பட்டியலில் தெலுங்கு நடிகை அஷு ரெட்டி பெயரும் இருந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது.

இதனை அஷு ரெட்டி மறுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, "கே.பி.சவுத்ரியுடன் எனக்கு தொடர்பு இல்லை. அவருடன் மணிக்கணக்கில் பேசவும் இல்லை. இதை என்னால் நிரூபிக்க முடியும். ஆனாலும் என்னை தொடர்பு படுத்தி எனது செல்போன் நம்பரையும் வெளியிட்டு உள்ளனர்.

இதனால் எனக்கு போனில் மிரட்டல்கள் வருகின்றன. அந்த செல்போன் நம்பரை என்னால் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. அவதூறு பரப்பியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்'' என்றார்.


Next Story