சினிமாவில் எதிரிகள் நித்யா மேனன் புகார்


சினிமாவில் எதிரிகள் நித்யா மேனன் புகார்
x

சினிமாவில் எதிரிகள் உள்ளனர் என நடிகை நித்யா மேனன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நித்யாமேனன் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் திரைக்கு வந்துள்ளது. நித்யாமேனன் குறித்து சமீப காலமாக அடிக்கடி வதந்திகள் வருகின்றன். ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று பேசினர். கேரளாவில் நடந்த 'தட்சமயம் ஒரு பெண்குட்டி' என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நித்யாமேனனை சந்திக்க சென்ற தயாரிப்பாளர்களை அவர் சந்திக்க மறுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நித்யாமேனன் திமிர் பிடித்தவர் என்றும், அவர் மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் வற்புறுத்தினர்.

இதுகுறித்து தற்போது நித்யாமேனனிடம் கேள்வி எழுப்பியபோது சினிமாவில் தனக்கு எதிரிகள் இருப்பதை உறுதி செய்தார். அவர் கூறும்போது, ''நாம் வளரும்போது நம் கால்களை பிடித்து கீழே இழுக்க வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். அவர்கள் பேச்சை நாம் கேட்காதபோது இதுபோன்ற கிசுகிசுக்கள் வரும். நித்யா மேனனுடன் வேலை செய்வது ரொம்ப கஷ்டம் என்று வெளியே சொல்லுவார்கள். ஆனால் என்னோடு வேலை செய்தவர்கள் எப்போதும் அதுமாதிரி உணரவே இல்லை. ஏனென்றால், நான் எப்படிப்பட்டவள் என்பது அவர்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்" என்றார்.


Next Story