ரூ.400 கோடி வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன்


ரூ.400 கோடி வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன்
x

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்து பெரிய எதிர்பார்ப்போடு வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் ரூ.400 கோடியை நெருங்குகிறது.

இந்த படம் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

உலக அளவில் மூன்று நாட்களில் ரூ.200 கோடி வசூலித்தது. 7 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டியதாக அறிவித்தனர். இதன் மூலம் ரஜினியின் எந்திரன், கபாலி படங்கள் போல் ரூ.300 கோடி கிளப்பில் பொன்னியின் செல்வனும் இணைந்தது. தமிழகத்தில் மட்டும் 7 நாட்களில் ரூ.124 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் என்பதால் இன்னும் சூடுபிடிக்கும் என்றும், வசூல் ரூ.400 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் முந்தைய தமிழ் படங்களின் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. மணிரத்னம் படங்கள் வரலாற்றில் உலக அளவில் அதிக வசூல் குவித்த பெரிய வெற்றி படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தை ஓ.டி.டி. தளத்துக்கு ரூ.125 கோடிக்கு விற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story