அதிதி பாலனை பாராட்டிய தங்கர் பச்சான்


அதிதி பாலனை பாராட்டிய தங்கர் பச்சான்
x

தங்கர் பச்சான் இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய படம் `கருமேகங்கள் கலைகின்றன'. இதில் பாரதிராஜா, கவுதம் மேனன், எஸ்.ஏ, சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். அதிதிபாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

தங்கர் பச்சான் கூறும்போது, ``படத்தில் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க நிறைய நடிகைகளைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக் கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட `கண்மணி' எனும் பாத்திரத்தில் அதிதி பாலன் நடிக்கிறார்.

அருவி படத்தின் `அருவி' பாத்திரத்தை எவ்வாறு மறக்க இயலாதோ, அதைவிடக் கூடுதலான தாக்கத்தை இப்பாத்திரம் ஏற்படுத்தும். மிகையான நடிப்பு வெளிப்பட்டுவிட்டால் படத்தின் கருவிற்கு களங்கம் ஏற்படக்கூடும் எனும் எச்சரிக்கை உணர்விலேயே `கண்மணி' பாத்திரத்தைப் படமாக்கினேன்.

என்னுடைய நம்பிக்கையை நூறு விழுக்காடு நிறைவு செய்திருக்கின்றார். தான் ஏற்ற பாத்திரத்திற்கு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகள் மிக அரிதாகவே உள்ளனர்.

`தென் இந்தியாவின் நந்திதா தாஸ் இவர்' என எனது அனுபவத்தில் உணர்கிறேன்.இப்படத்தைக் காணும் அனை வரையும் கலங்கடித்து மீளாத தாக்கத்தை உருவாக்கும்'' என்றார். இசை: ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு:ஏகாம்பரம்.


Next Story