துபாயில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை


துபாயில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை
x

துபாயில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழும் அல்லு அர்ஜூன், 'புஷ்பா' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

தற்போது புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

தற்போது துபாயில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இந்த மெழுகு சிலை இந்த ஆண்டு இறுதியில் திறக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி மெழுகு சிலை ஏற்பாட்டாளர்கள் அல்லு அர்ஜூனை சந்தித்து உடல் அளவீடுகளை எடுத்துள்ளனர். அச்சு அசலாக இந்த சிலை அமையவேண்டும் என்பதால் சில மணி நேர இடைவெளியிலும் தொடர் அளவீடுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை திறக்கப்பட உள்ள நிலையில் அல்லு அர்ஜூனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிறப்பை பெறும் முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story