பாலூட்டும்போது அலட்சியம் வேண்டாம்


பாலூட்டும்போது அலட்சியம் வேண்டாம்
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 10:59 AM GMT)

தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ‘ப்ரெக்ஸ்டிங்’ என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாய்மை பெண்மையின் உச்சம் என்றால், தாய்ப்பால் தாய்மையின் உச்சம். 

இன்றைய இளம் தாய்மார்களில்  சிலர் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. தாய்க்கும், குழந்தைக்குமான உணர்வுரீதியான இணைப்பை இது பாதிக்கும். பல எதிர் விளைவுகளையும் உண்டாக்கும்.

தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ‘ப்ரெக்ஸ்டிங்’ என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி, தொலைக்காட்சி பார்ப்பதால் உண்டாகும் முக்கியமான ஐந்து எதிர்விளைவுகளை பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உணர்வு 
அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதால், தாய்க்கும் குழந்தைக்குமான பார்வை தொடர்பு (eye contact) தடைப்படுகிறது.இதன் காரணமாக இருவரின் உணர்வும் ஒன்றாமல் போகிறது. 

கவனம் 
தாயின் கவனம் வேறு பக்கம் இருப்பதை பால் பருகும்போது குழந்தையால் உணர முடியும். எனவே அந்த நேரத்தில் குழந்தையும் பால் அருந்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க நேரிடும். இந்த செயல்பாடு குழந்தையின் கவனிக்கும் திறனை பாதிக்கும் என்பது ‘ஸ்டில் பேஸ் எக்ஸ்பீரிமெண்ட்’ எனும் உளவியல் ஆய்வின் மூலம்  நிரூபிக்கப்பட்டுள்ளது. 

தேவை  
தாயின் கவனம் அலைபேசி, தொலைக்காட்சியில் சிதறடிக்கப்படுவதால் ‘லாட்சிங் டெக்னிக்’ எனும் குழந்தைக்குத் தேவையான அளவு பாலூட்டுதல், குழந்தைக்கு வசதியான முறையில் பாலூட்டுதல் போன்றவை கவனிக்கப்படாமல், சரியான அளவு தாய்ப்பால், சரியான முறையில் குழந்தைக்கு கிடைப்பதில்லை. 

வளர்ச்சி  
குழந்தைகள் வளர்ச்சியின் தொடக்க நிலையில் இருப்பதால் அலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றின் கதிர்வீச்சுகள் அவர்களின் டி.என்.ஏ உரு வாக்கம் உள்ளிட்ட நுண்ணிய வளர்ச்சி விகிதங் களை அதிகம் பாதிப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. எனவே பாலூட்டும் நேரம் மட்டு மில்லாமல் மற்ற நேரங்களிலும் இவை குழந்தைகளின் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

எதிர்மறை மாற்றங்கள்  
தாய்ப்பால் ஊட்டும்போது அலைபேசி, தொலைக்காட்சியில் கவனம் செலுத்துவதால்,  குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத் தவறுகிறீர்கள். இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் போகும் வாய்ப்பு உண்டு. 

Next Story