வீட்டின் கதவை உடைத்து ரூ.2.5 லட்சம் நகை-வெள்ளிபொருட்கள் கொள்ளை


வீட்டின் கதவை உடைத்து ரூ.2.5 லட்சம் நகை-வெள்ளிபொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 20 April 2018 11:00 PM GMT (Updated: 20 April 2018 8:16 PM GMT)

மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2.5 லட்சம் நகை-வெள்ளிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

பெருகவாழ்ந்தான்,

மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் நகை- வெள்ளி பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடியை அடுத் துள்ள மூவாநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கலைச் செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் மூவாநல்லூரில் கலைச்செல்வி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுப்பிர மணியத்தின் மகன் தஞ்சையில் ஒரு விடுதியில் தங்கி படித்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வியும், அவரது மகளும் வீட்டை பூட்டிவிட்டு மூவாநல்லூர் பக்கத்து தெருவில் வசிக்கும் கலைச்செல்வியின் அக்கா வீட்டுக்கு சென்றிருந்தனர்.

பின்னர் அங்கே 2 பேரும் இரவு தங்கி விட்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை கலைச்செல்வி வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.75 ஆயிரம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து கலைச்செல்வி மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

Next Story