கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும், கலெக்டரிடம் கோரிக்கை மனு


கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும், கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 12:39 PM GMT)

கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமையில் கலெக்டர் அன்புசெல்வனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கடலூர்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலெக்டர் அன்புசெல்வனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் விருத்தாசலம் கோட்ட செயலாளர் கலையரசன் மீது பழிவாங்கும் எண்ணத்துடன் கொடுக்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் பெறுவதோடு, அவர் மீது போடப்பட்டுள்ள 17–பி மேமோவை ரத்து செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, அன்புமணி ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ள குற்றகுறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என விருத்தாசலம் கோட்டாட்சியரை கண்டித்து எங்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் புகார் செய்ய காரணமாக இந்த தாசில்தாரையும், இதற்கு உடந்தையாக இருந்த கோட்டாட்சியரையும் கண்டித்து நாளை(திங்கட்கிழமை) விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாலை நேர தர்ணா போராட்டமும், வருகிற 19–ந் தேதி (புதன்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story