ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது


ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 11:28 PM GMT (Updated: 13 Dec 2018 11:28 PM GMT)

ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக புகார். ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை. 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

மும்பை தாதர் சிவாஜி பார்க், பைகுல்லா, காலாசவுக்கி, அக்ரிபாடா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஆன்-லைன் லாட்டரி மையங்களில் அச்சிடப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யாமல், கையால் எழுதப்பட்ட சீட்டுகளை விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்து வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த இடங்களில் உள்ள 7 ஆன்-லைன் லாட்டரி மையங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, மேற்படி கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த மையங்களில் இருந்து 11 கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள், 5 செல்போன்கள் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story