சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது


சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Jan 2019 11:17 PM GMT (Updated: 5 Jan 2019 11:17 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் அய்யப்பன்(வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பத்மாவதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பத்மாவதியின் நடத்தையில் அய்யப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இவர் களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், வீட்டில் இருந்த கத்தியால் பத்மாவதியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

பலத்த காயமடைந்த பத்மாவதி சத்தம் போட்டார். இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பத்மாவதியின் தந்தை பன்னீர்செல்வம் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story