திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம்: கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து


திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம்: கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து
x
தினத்தந்தி 24 May 2019 10:30 PM GMT (Updated: 24 May 2019 7:29 PM GMT)

திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம் காரணமாக, கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி,

திருச்சி-ஈரோடு வழித்தடத்தில் ரெயில் சேவையில் இன்றும் (சனிக்கிழமை), வருகிற 28-ந் தேதி, ஜூன் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56712) ஈரோடு-திருச்சி இடையேயும், திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (56841) கரூர்-ஈரோடு இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயில் (56713) திருச்சி கோட்டை-கரூர் இடையே 90 நிமிடங்கள் தாமதமாகும். வருகிற 28-ந் தேதி ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (56110), கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் (76836), திருச்சி-கரூர் பயணிகள் ரெயில் (76833) ஆகிய ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பாலக்காடு- திருச்சி பயணிகள் ரெயில் ஈரோடு-திருச்சி இடையேயும், திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் கரூர்-ஈரோடு இடையேயும் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயில் திருச்சி கோட்டை-கரூர் இடையே 80 நிமிடங்கள் தாமதமாகும். ஜூன் மாதம் 1-ந் தேதி பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் ஈரோடு-திருச்சி இடையேயும், திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் கரூர்-ஈரோடு இடையேயும், திருச்சி- பாலக்காடு பயணிகள் ரெயில் திருச்சி கோட்டை- கரூர் இடையே 90 நிமிடங்கள் தாமதமாகும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


Next Story