கோவில் பூசாரி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


கோவில் பூசாரி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 7:08 PM GMT)

கோவில் பூசாரி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 56). இவர் தனது வீட்டின் அருகே ஒரு கோவில் அமைத்து அதில் பூசாரியாக இருந்தார். இவர் கடந்த 2009–ம் ஆண்டு சென்னையில் உள்ள மகனை பார்த்து விட்டு மற்றொரு மகனான அறிமுருகனுடன் வீட்டுக்கு வந்தார்.

அப்போது செய்யூர் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் என்ற ஊனம் கண்ணன் (40) என்பவர் சின்னப்பனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். இதற்கு பூசாரி சின்னப்பன் மறுக்கவே அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து கண்ணன் தப்பி ஓடி விட்டார்.

அங்கு இருந்தவர்கள் சின்னப்பனை செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்தனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் கண்ணனை கைது செய்து அவர் மீது செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன், கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.


Next Story