போட்டி தேர்வுக்கான பயிற்சி பெற 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் கலெக்டர்கள் தகவல்


போட்டி தேர்வுக்கான பயிற்சி பெற 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் கலெக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 29 Sep 2019 7:51 PM GMT)

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

அரியலூர்,

மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள செய்ய பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in-லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளத் துறை துணை-இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர் மீன்வளத்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அரியலூர் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், அறை எண் 234, 2-வது மேல்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அரியலூர்- 621704. என்கிற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), டி.ஜி.வினய் (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story