செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு


செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 5:04 PM GMT)

அசேஷம் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த அசேஷம் கிராமத்தில் உள்ள பாரதிதாசன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோபுரம் அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அசேஷம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளமதி மணிகண்டன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பது இங்கு வசிப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இதுகுறித்து உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுகுறித்து புகார் அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Next Story