கூடலூரில் 22 கிலோ கஞ்சா கடத்தல்; அண்ணன்-தம்பி கைது


கூடலூரில் 22 கிலோ கஞ்சா கடத்தல்; அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 9:47 PM GMT)

கூடலூரில் மோட்டார்சைக்கிளில் 22 கிலோ கஞ்சா கடத்திய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் வடக்கு ரத வீதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் சாக்கு பையுடன் 2 பேர் வந்தனர். இந்தநிலையில் போலீசாரை கண்டதும் அவர்கள் மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை ஜீப்பில் விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கூடலூர் 20-வது வார்டு மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகன்துரை என்பவரது மகன்கள் செல்வம் (வயது 34), வசந்த் (30)என தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடமிருந்த சாக்கு பையை பிரித்து சோதனை செய்தபோது அதில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார்கள்? இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story