கும்மிடிப்பூண்டியில் குண்டும், குழியுமான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
கும்மிடிப்பூண்டி,
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் இந்த சாலையின் ஒரு பகுதியானது கடந்த 2 தினங்களாக பெய்த லேசான மழையால் குண்டும், குழியுமாக மாறி விட்டது. மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைக்காததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து சீரான வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் இந்த சாலையின் ஒரு பகுதியானது கடந்த 2 தினங்களாக பெய்த லேசான மழையால் குண்டும், குழியுமாக மாறி விட்டது. மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைக்காததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து சீரான வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story