அரியலூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி; புதிதாக 32 பேருக்கு தொற்று பெரம்பலூரில் 25 பேர் பாதிப்பு


அரியலூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி; புதிதாக 32 பேருக்கு தொற்று பெரம்பலூரில் 25 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2020 9:03 AM GMT (Updated: 27 Sep 2020 9:03 AM GMT)

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார். புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் நகராட்சி பகுதி களிலும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட பகுதிகளிலும் நேற்று தலா 3 பேருக்கும், அரியலூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றி யங்களுக்கு உட்பட்ட பகுதி களிலும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளிலும் தலா 4 பேருக்கும், செந்துறை ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதி களில் 5 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத் துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும் என மொத்தம் 22 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

இதனால் அரியலூர் மாவட் டத்தில் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3,635 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வினால் பாதிக்கப் பட்டு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த அரியலூரை சேர்ந்த 38 வயது ஆண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந் துள்ளது. பல்வேறு மருத்துவ மனைகளில் தற்போது 677 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். மொத்தம் 2,919 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 458 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடி வுகள் வரவேண்டியுள்ளது.

25 பேருக்கு...

இதேபோல் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 8 பேரும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வட்டாரங் களில் தலா 6 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 5 பேருக்கும் என மொத்தம் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட் டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனா விற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1,616 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 382 பேருக்கு கொரோனா மருத்துவ பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story