ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூல்


ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 20 April 2021 9:37 AM GMT (Updated: 20 April 2021 9:37 AM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக முககவசம் அணியாதவர்களை கண்காணித்தனர். அந்த வகையில் முககவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்தார்.

Next Story