செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,982 பேர் பாதிப்பு; 29 பேர் சாவு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,982 பேர் பாதிப்பு; 29 பேர் சாவு
x
தினத்தந்தி 24 May 2021 12:50 AM GMT (Updated: 24 May 2021 12:50 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,982 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 677-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 634 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1503-ஆக உயர்ந்தது. 15 ஆயிரத்து 540 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 897 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 469-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 817- ஆக உயர்ந்துள்ளது. 7,143 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story