கல்பாக்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6 பேரின் வாகனங்கள் பறிமுதல்


கல்பாக்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6 பேரின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2021 3:59 AM GMT (Updated: 30 May 2021 3:59 AM GMT)

கல்பாக்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6 பேரின் வாகனங்கள் பறிமுதல்.

கல்பாக்கம்,

கொரோனா தொற்று பரவலையடுத்து தடையில்லா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உரிய காரணமின்றி சுற்றி திரிந்த 6 பேரின் இருசக்கர வாகனங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.

Next Story