தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

x
தினத்தந்தி 29 March 2022 8:03 PM IST (Updated: 29 March 2022 8:03 PM IST)
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ககளை போலீசார் கைப்பற்றினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கணேஷ் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது மளிகை கடையில் வினோத் குமார்(வயது 25), என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து மளிகை கடையில் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வினோத்குமாரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





