பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி - ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு


பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி -  ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
x

பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலியாகினர், ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்து விட்டனர் என முதல் மந்திரி அலுவலக்ம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.


Next Story