மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் டவுன் பகுதியில் நடந்த 2 திருட்டு வழக்குகள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் மங்களூரு கசப்பாவை சேர்ந்த பராஜ் (வயது 27), சொக்கப்பட்டு பகுதியை சேர்ந்த டோஸி (34) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் மதிப்பிலான 223 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் 2 பேரையும் கைது செய்ததன் மூலம் பனம்பூர் மற்றும் பண்ட்வால் டவுன் பகுதியில் பதிவாகியிருந்த திருட்டு வழக்கிற்கு தீர்வு கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





