காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்துள்ள கும்கடி பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் குழுவாக இணைந்து கும்கடி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சிப்பதை ராணுவ வீரர்கள் கண்டனர்.

உடனடியாக ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.


Next Story