பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்


பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
x
தினத்தந்தி 19 Oct 2018 5:28 PM IST (Updated: 19 Oct 2018 5:28 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.


ஸ்ரீநகர்,


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உரி செக்டாரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையை விடுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இருதரப்பு சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை.

1 More update

Next Story