மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

x
தினத்தந்தி 7 April 2020 1:46 PM IST (Updated: 7 April 2020 1:46 PM IST)
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. நாட்டின் நிதி தலைநகரும், மராட்டிய தலைநகருமான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா தொற்று நுழைந்து இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





