மராட்டிய மாநிலத்தில் இன்று 20,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் இன்று 20,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 Sep 2020 3:24 PM GMT (Updated: 15 Sep 2020 3:24 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 20,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மராட்டிய மாநிலத்தில் மிக அதிக அளவிலான பாதிப்பு எண்ணிக்கை தினமும் பதிவாகி வருகிறது. மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

அந்த வகையில் மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 20,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,97,856 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 515 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,409 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7,75,273 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 2,91,797 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story