ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 22 Oct 2020 2:22 PM GMT (Updated: 22 Oct 2020 2:22 PM GMT)

ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,96,919 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6,524 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆந்திராவில் 32,257 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை ஆந்திராவில் 10 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story