ஆந்திர மாநிலத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திர மாநிலத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 Oct 2020 6:09 PM IST (Updated: 30 Oct 2020 6:09 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,20,565 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,676 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 25,514 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 7,88,375 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story