மராட்டிய மாநிலத்தில் இன்று 15,176 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

மராட்டியத்தில் தற்போது 1,38,361 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 9,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,24,773 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 388 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,154 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 15,176 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,69,179 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 1,38,361 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று 575 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இன்று 718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 15,390 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story