மணிப்பூரை தொடர்ந்து மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு


மணிப்பூரை தொடர்ந்து மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 9 July 2021 8:56 AM GMT (Updated: 9 July 2021 9:59 AM GMT)

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரை தொடர்ந்து மேகாலயாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.




துரா,

மேகாலயாவின் துரா நகரின் வடக்கு பகுதியில் இன்று இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு தப்பியோடினர்.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் உக்ருல் நகரில் இருந்து தென்கிழக்கே 57 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.56 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி இருந்தது.  இந்நிலையில், மற்றொரு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.


Next Story