மராட்டிய மாநிலத்தில் இன்று 8,535 பேருக்கு கொரோனா


மராட்டிய மாநிலத்தில் இன்று 8,535 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 July 2021 4:23 PM GMT (Updated: 11 July 2021 4:23 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் தற்போது 1,16,165 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 8,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,57,799 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 156 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,25,878 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 6,013 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59,12,479 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 1,16,165 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story