மராட்டியத்தில் ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 180 பேர் பலி


மராட்டியத்தில் ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 180 பேர் பலி
x
தினத்தந்தி 18 July 2021 9:16 PM GMT (Updated: 18 July 2021 9:16 PM GMT)

மராட்டியத்தில் இதுவரை 62 லட்சத்து 14 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு 7 முதல் 8 ஆயிரம் வரையே இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று பாதிப்பு 9 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. இதேபோல தொற்று பாதிப்பில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 756 ஆக குறைந்து உள்ளது. மாநிலத்தில் இதுவரை 62 லட்சத்து 14 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 59 லட்சத்து 80 ஆயிரத்து 350 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 180 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 31 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல தலைநகர் மும்பையில் புதிதாக 454 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 31 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்து 702 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1,001 நாளாக அதிகரித்து உள்ளது. 2½ மாதங்களுக்கு முன் நகரில் நோய் பரவல் இரட்டிப்பு ஆகும் காலம் 50 நாட்களுக்கு கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story