உத்தரகாண்டில் கனமழை; 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு
உத்தரகாண்டில் குமாவன் மண்டலத்தில் கனமழைக்கு 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி கூறியுள்ளார். இந்த நிலையில், குமாவன் மண்டல ஆணையாளர் சுஷில் குமார் கூறும்போது, கடந்த 17 முதல் 19 ஆகிய 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளர்.
கனமழையால் குமாவன் நகரில் பயிர்கள் மற்றும் பிற சொத்துகளும் சேதமடைந்து உள்ளன. அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எண்ணற்ற வீடுகளும் சேதமடைந்து உள்ளன.
Related Tags :
Next Story