உத்தரகாண்டில் கனமழை; 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு


உத்தரகாண்டில் கனமழை; 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 2:47 AM IST (Updated: 23 Oct 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் குமாவன் மண்டலத்தில் கனமழைக்கு 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.



டேராடூன்,

உத்தரகாண்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி கூறியுள்ளார்.  இந்த நிலையில், குமாவன் மண்டல ஆணையாளர் சுஷில் குமார் கூறும்போது, கடந்த 17 முதல் 19 ஆகிய 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளர்.

கனமழையால் குமாவன் நகரில் பயிர்கள் மற்றும் பிற சொத்துகளும் சேதமடைந்து உள்ளன.  அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.  எண்ணற்ற வீடுகளும் சேதமடைந்து உள்ளன.

1 More update

Next Story