இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு கொரோனா பாதிப்பு...!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
x
தினத்தந்தி 28 March 2022 4:01 AM GMT (Updated: 28 March 2022 4:01 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,567 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 859 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 035 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 824 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 183 கோடியே 26 லட்சத்து 35 ஆயிரத்து 673 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story