லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு


லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
x

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொப்பல்,

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமை லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயபுராவைச் சேர்ந்த சிலர் காரில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் கார் கல்கேரி கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் இருந்து குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிரேன் மூலம் காரை அகற்றி, உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


Next Story