7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்; அந்தேரி கிழக்கு-சிவசேனா, மோகாமா-ஆர்.ஜே.டி. முன்னிலை


7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்; அந்தேரி கிழக்கு-சிவசேனா, மோகாமா-ஆர்.ஜே.டி. முன்னிலை
x

7 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அந்தேரி கிழக்கு (மராட்டியம்) தொகுதியில் சிவசேனா மற்றும் மோகாமா (பீகார்) தொகுதியில் ஆர்.ஜே.டி. முன்னிலை வகிக்கிறது.


புதுடெல்லி,


நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது.

இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில்தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின.

இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அவர் 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் 22,756 ஓட்டுகள் பெற்று உள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர் சோனம் தேவி 15,032 ஓட்டுகளுடன் அவரை பின்தொடருகிறார்.

மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு தொகுதியில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் ருதுஜா லத்கே, 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 11,361 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.


Next Story