இடுக்கி அருகே பயங்கரம்: இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை - நண்பர் கைது


இடுக்கி அருகே பயங்கரம்: இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை - நண்பர் கைது
x

இடுக்கி அருகே இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு:

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இடுக்கி மாவட்டம் மறையூர் பெரிய குடிகை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். (வயது 27). இவருடைய நண்பர் சுரேஷ் (26). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டு ரமேசும், சுரேசும் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அந்தப்பகுதியில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரமேசை சரமாரியாக தாக்கினார். தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் அதே இரும்புக் கம்பியை ரமேஷின் வாயில் குத்தி மறுபுறம் வர வைத்தார்.

இதனால் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மேலும் அங்கிருந்து சுரேஷ் தப்பியோடி தலைமறைவானார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு இதுபற்றி உடனடியாக மறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரமேஷின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சுரேசை கைது செய்தனர்.இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story