ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
x

பயங்கரவாதியிடம் இருந்து 200 ஏ.கே. ரைபிள் தோட்டாக்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள் உள்ளிட்டவை மீட்டப்பட்டன.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் தங்தார் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து சுட்டு வீழ்த்தினர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து 200 ஏ.கே. ரைபிள் தோட்டாக்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள் உள்ளிட்டவை மீட்டப்பட்டன. மேலும் உயிரிழந்த பயங்கரவாதி குறித்தான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story