அதானி குழு மோசடி: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மனு


அதானி குழு மோசடி: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மனு
x

கோப்புப்படம்

அதானி குழு மோசடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மனு அளித்துள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில், காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்த விவகாரத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றைக் கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

அதானி நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றையும் மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்" என அதில் கோரியுள்ளார்.


Next Story