ஹிண்டன்பர்க் அறிக்கை: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் 'செபி' மனு


ஹிண்டன்பர்க் அறிக்கை: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் செபி மனு
x

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ‘செபி’ மனு அளித்துள்ளது.

புதுடெல்லி,

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் புகார் அறிக்கையை தொடர்ந்து, பங்குச்சந்தையில் விதிகளை முறைப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 2-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த நிபுணர் குழுவில் ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவ்தத், நந்தன் நிலேகனி, சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும், அபய் மனோகர் சப்ரே குழு அதன் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் 2 மாதங்களுக்குள் சீலிட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்தது.

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் (செபி) 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அதன் நிலை அறிக்கையை 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் 'செபி' மனு தாக்கல் செய்துள்ளது.


Next Story