சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!


சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!
x

சத்தீஸ்கார் மாநிலம் அம்பிகாபூரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கார் மாநிலம் அம்பிகாபூரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று அதிகாலை 5.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி அம்பிகாபூரில் இருந்து மேற்கே - வடமேற்கே 65 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.


Next Story