ஆந்திரா: ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு


ஆந்திரா: ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
x

மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய், மேலே சென்ற மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் உயிரிழந்தனர்.

காக்கிநாடா,

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் காண்டேபள்ளி மண்டலத்தில் உள்ளது உப்பலபாடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி கல்லா நாகராஜு (வயது 25) ஆழ்துளை கிணற்றில் உள்ள பழைய மோட்டாரை பழுது பார்க்க மெக்கானிக் கிள்ளி நாகு (38), அவரது உதவியாளர் போடிரெட்டி சூரிபாபு (40) ஆகியோரை அழைத்து வந்து உள்ளார்.

மூன்று பேரும் சேர்ந்து பழுதான மோட்டாரை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து உள்ளனர். அப்போது மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய், மேலே சென்ற மின்சார கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story