புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் - கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் - கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
x

கேரளாவின் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தற்போதைய தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி அனில்காந்த் இருவரும் வருகிற ஜூன் 30-ந்தேதி ஓய்வு பெற உள்ளனர்.

இதையடுத்து கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக டாக்டர்.வி.வேணு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக இது தொடர்பான முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story