தொடரும் வெப்ப அலை: மே.வங்காளத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு


தொடரும் வெப்ப அலை: மே.வங்காளத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
x

கோப்புப்படம்

தொடரும் வெப்ப அலை காரணமாக மே.வங்காளத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 5-ந்தேதியும், தொடக்கப்பள்ளிகள் 7-ந்தேதியும் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்து இருந்தது.

ஆனால் மாநிலத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது. அங்கு இந்த மாதத்தின் முதல் பாதி வரை வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கான கோடை விடுமுறை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story