தேர்தலில் வாக்களிக்காவிட்டால்...மக்களை மிரட்டுகிறது பா.ஜ.க. - மம்தா பானர்ஜி தாக்கு


தேர்தலில் வாக்களிக்காவிட்டால்...மக்களை மிரட்டுகிறது பா.ஜ.க. - மம்தா பானர்ஜி தாக்கு
x

ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுவதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பா.ஜ.க. மக்களை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டினார்.

குடியுரிமை (திருத்தம்) சட்டம் அல்லது சி.ஏ.ஏ.,வில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூச் பெஹாரில் உள்ள உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக ராஜ்பன்ஷிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தி உள்ளது.

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில்:-

பா.ஜ.க. மத்திய அமைப்புகளை தேர்தலுக்கு பயன்படுத்துகிறது. பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காவிட்டால், அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) ஆகியவற்றை தங்கள் வீட்டிற்கு அனுப்புவோம் என்று தொலைபேசியில் மக்களை பா.ஜ.க. மிரட்டுகிறது.

நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடுவதற்காக ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று நாடகம் ஆடுவதில்லை.

மக்களவை தேர்தலுக்கு முன் அரசியல் செய்ய மத்திய அரசு சி.ஏ.ஏ. பிரச்சினையை கொண்டு வருகிறது என்றார்.

முன்னதாக, மத்திய மந்திரியும் பாஜக தலைவருமான சாந்தனு தாக்கூர், அடுத்த ஏழு நாட்களுக்குள் சி.ஏ.ஏ. நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story