சர்வதேச சட்டத்தில் இரு நாடுகளும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு உள்ளது; பிரதமர் மோடி புகழாரம்


சர்வதேச சட்டத்தில் இரு நாடுகளும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு உள்ளது; பிரதமர் மோடி புகழாரம்
x

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள் கடுமையான புயல் சூழலிலும் நிலையாகவும் மற்றும் உறுதி தன்மையுடனும் இருந்து வருகிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

பாரீஸ்,

டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்று உள்ளார். அந்நாட்டு அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த நிலையில், லெஸ் எக்கோஸ் என்ற பிரான்ஸ் நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவு சிறந்த வடிவில் உள்ளது. அது வலிமையாகவும், நம்பிக்கை மற்றும் உறுதியாகவும் உள்ளது.

கடுமையான புயல் சூழலிலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நிலையாகவும் மற்றும் உறுதி தன்மையுடனும் இருந்து வருகிறது. வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கும்போது துணிவுடனும் மற்றும் இலக்குடனும் செயல்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பரஸ்பர நம்பிக்கையின் அளவு மற்றும் நாம் பகிர்ந்து கொண்டுள்ள நம்பிக்கை ஈடு இணையற்றது. பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவற்றில் இருந்து அது நிலை கொண்டு உள்ளது. செயல்திட்டம் சார்ந்த சுயாட்சியுடனான ஒரு வலிமையான உணர்வை நாம் பகிர்ந்து இருக்கிறோம்.

சர்வதேச சட்டத்தில் இரு நாடுகளும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு உள்ளது. பன்முக தன்மையில் இரு நாடுகளும் அசைக்க முடியாத நம்பிக்கையை சுமந்து செல்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Next Story