மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!
x

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்து உள்ளார்.. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2023 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வால், 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் அரசு ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story