ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு


ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு
x

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற மீட்புப் பணியின் முடிவில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள லாரிபலி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை குழந்தை ஒன்று கிடந்தது கண்டறியப்பட்டது. குழந்தையின் அழுகை சத்தத்தை வைத்து அப்பகுதி மக்கள் இதனை கண்டறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்புப் பணியின் முடிவில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தையை யாரேனும் ஆழ்துளை கிணற்றுக்குள் வீசிச்சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story